ஞாயிறு, 18 மே, 2014

 

ஸ்ரீ கருப்பசாமி மந்திரம்.
English-Tamil-தமிழ், Lyrics, வரிகள்.

ஓம் க்ரூம் அஸிதாங்காய மஹாவீர 
பராக்ரமாய கதாதராய தூம்ர நேத்ராய,
தம்ஷ்ட்ர கராளாய, மாலாதராய 
நீலாம்பரதாய, ஸர்வ பாபக்னே,
ஸர்வ பயாக்னே, சிவபுத்ராய, 
க்ருத்தாய க்ருபாகராய ஸ்வாஹா.

முதலில் விநாயகரையும், பின்னர் உங்கள் 
குலதெய்வத்தையும் வழிபட்டு, மேலே உள்ள 
கருப்பசாமியின் மந்திரத்தை முழுமனதுடன் 
தினமும் பதினெட்டு முறை கூறவும்.
ஸ்ரீ கருப்பசாமியின் அருள் கிட்டும்.
17 MAY 2014

வெள்ளெருக்கு விநாயகர் மகிமை

ஏழைகளின் கடவுள் விநாயகர்தான். பொன்,வெள்ளி,செம்பு மற்றும் நவரத்தினங்களால் செய்யப்பட்ட விநாயகரை வசதி உள்ளவர்கள் வைத்து வழிபடுகின்றார்கள். வசதியே இல்லாத பக்தன் என்ன செய்ய முடியும்?. பசுஞ்சாணாததை வட்டமாக ஒரு தட்டாக வடிவமைக்கவேண்டும். அதன் மேல் முட்டை வடிவில் இன்னொரு சாணத்துண்டை வைத்துவிட்டால் போதும் . விநாயகர் பூஜைக்கு ரெடி. அருகம்புல் மட்டும் போதும் அர்ச்சனை செய்யலாம்.விநாயகருக்கு தீட்டு கிடையாது. தோஷங்களுக்கும் அப்பாற்பட்டவர். பிறந்த வீட்டில் விநாயகர், சடங்கு வீட்டில் விநாயகர், கல்யாண வீட்டில் விநாயகர், கிரகப்ரவேச வீட்டில் விநாயகர், தொழில் துவங்க விநாயகர், இறப்பு வீட்டில் விநாயகர்,கருமாதி வீட்டில் விநாயகர்,கல்விக்கு விநாயகர் இப்படியாக நம் வாழ்வில் பல்வேறு நிலைகளில் தொடர்புடையவர் விநாயகர். தெருமுனை தோறும் அமர்ந்து துர்தேவதைகளை கட்டுப்படுத்துகின்றார்.
வெள்ளெருக்கு எருக்கஞ்ச் செடிகள் குடும்பத்தைச் சேர்ந்தது. நீல எருக்கு, ராம எருக்கு என ஒன்பது வகை எருக்கு இருப்பதாக வைத்தியர்கள் கூறுகின்றனர். எருக்கன் செடி 12 வருட காலம் மழை இல்லாவிட்டாலும், அதன் பருவ காலங்களில் பூத்து, காய்த்து, வளர்ந்து வரும் இது சூரியனுடைய மூலிகை சூரிய ஒளியிலுள்ள தண்ணீரை இது நுட்பமாக கிரகித்து வளரக்கூடியது .  இந்த விசேஷ அம்சம் உடையதுதான் வெள்ளெருக்கு.இந்த வெள்ளெருக்கு செடியின் இலைதான் பீஷ்மரின் சாபம் கூட நீங்க வழி கொடுத்தது. தான் நினைக்கும் போது இறக்கும் பாக்கியம் கிடைத்தும்கூட துரியோதனனின் பாவசெயலை தடுக்க திராணியின்றி மவுனம் சாதித்த நிலையால் வரம் சாபமாகிறது.அதிலிருந்து விடுபட தன் தந்தையை அழைத்து தன்னை எரிக்க சூரியனை கொண்டு பிழிய சொல்கிறார். அது முடியாது வேண்டுமானால் சூரியனின் ஆற்றலை முழுவதுமாக தன்னுள் ஈர்க்கும் சக்தி படைத்த எருக்கஞ்ச்செடி  இலையை கொண்டு தகிக்கலாம் என்று வழி கூறுகிறார். அத்தனை சக்தி படைத்தது எருக்கஞ்ச்செடி.இதை வீட்டிலும் வளர்க்கலாம்.  இதன் பூவை வைத்து விநாயகருக்கும் சிவனுக்கும் அர்ச்சனை செய்யலாம். வெள்ளெருக்கம் பூ சங்கை பஸ்மமாக்க பயன்படுகிறது. வெள்ளெருக்கம் பட்டையை நூலுக்குப் பதில் விளக்கு திரியாக போட்டு எரிக்க சகல பூதங்களும் விலகி ஓடும். வெள்ளெருக்கு வடவேரில் மணிமாலை செய்யலாம். விநாயகர் செய்து வழிபடலாம். ஆகர்ஷணம் எட்டு வகைப்படும். இதில் தன ஆகர்ஷணம் என்னும் பண வரவை கொடுக்கக்கூடியது இந்த வெள்ளெருக்கு விநாயகர். இல்லறத்திற்கும், துறவறத்திற்கும் விநாயகர் வழிபாடு சிறந்தது. சைவ உணவு உண்டு வழிபட்டால் பலன் கூடும். விநாயகர் அகவலே ஒரு யோக நிலை விளக்கம்தான். வெள்ளெருக்கு விநாயகர் வழிபாடு அளப்பரிய பலன்களை தருகிறது. இதை அவரவர்கள் அனுபவத்தில் உணர முடியும். சொர்ண கணபதி மந்திரம் சொல்லி,வெள்ளெருக்கு விநாயகரை வழிபட்டால்,தனம் ஆகர்ஷணம் ஆகும்.வெள்ளெருக்கு விநாயகர் என பல இடங்களில் விற்பனை செய்கின்றார்கள். வேர்ப்பகுதிக்குப் பதில் தண்டுப் பகுதியில் விநாயகர் செய்து விற்கின்றாகள் அதனால் அது விரைவில் உளுத்துப்போய் உதிர்ந்து விடுகின்றது.
வெள்ளெருக்கு விநாயகரை வீட்டில் வைத்தால் இல்லம் முழுவதும் வெள்ளெருக்கு கதிர் வீச்சின் மூலம் வெள்ளெருக்கு விநாயகர் மகிமை உணரலாம்.
விநாயகர் அருளை பெறசெவ்வாய் மற்றும் சனிக்கிழமை விநாயகருக்கு மிக உகந்த நாட்கள், அன்று செவ்வரளி, மஞ்சள் அரளி மலர் சாற்றி வணங்கினால் மிக சிறப்பு. சுக்கில சதுர்த்தி அன்று அருகம்புல் சாற்றி வணங்கினால் வெற்றி நிச்சயம்.
வலம்புரி விநாயகரை சங்கடஹர சதுர்த்தியில் வணங்கினால் வெற்றி கிடைக்கும்.
திருமண காலத்தை விரைவில் காண மஞ்சள் விநாயகரை48 நாட்கள் பித்தளை தட்டுக்குள் மூடி வைத்து பூஜை செய்தால் பலன் கிடைக்கும்.
குடும்ப வறுமையை போக்க, முற்றிலும் அகற்ற வெள்ளெருக்கு  திரிபோட்டு தீபம் ஏற்ற வேண்டும்.
நவக்கிரக தோசம் நீங்க விநாயகர் பின்புறம் தீபம் ஏற்ற பலன் கிட்டும்.










கணபதி காயத்ரி மந்திரம்




வணக்கம்.இது ஒரு தமிழ் ஆன்மீகவாதிகளின் கட்டுரை தொகுப்பு:
கணபதி கடவுளை வழிபடும் முறை

எந்த சூழ்நிலையிலும் கணபதியுடைய காயத்ரி மந்திரத்தை ஜபிக்கலாம்.

ஓம் ஏக தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி ப்ரசோதயாத்.

இந்த மந்திரத்தை தினமும் காலையில் குளித்து விட்டு கணபதி சன்னதி முன்பாக கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து 3ன் மடங்குகளில் ஜபித்து வர வேண்டும்.
இதனால் நமது பாவங்கள் தீரதொடங்கும்.
உங்களின் நீண்ட கால பிரச்சனைகள் தீரத் தொடங்கும்.
இந்த மந்திரத்தை ஒரு வருடம் வரை ஜபித்து வந்தால் நியாயமான ஆசைகள் நிறைவேறும்.இது அனுபவ உண்மை.
ஒம் கம் கணபதியே நமஹ
இது கணபதியின் மூல மந்திரம்.இதை தொடர்ந்து ஜபித்து வந்தால் கணபதி கடவுளை நேரில் சந்திக்கமுடியும்.இதற்கு 4.00,000ம் தடவை தொடர்ந்து ஜபித்து வரவேண்டும்.இதுவும் பல ஆயிரம் தமிழ் மக்களின் அனுபவ உண்மை.இன்றும் கூட கணபதியின் ஆத்ம சமாதி இமயமலையின் 13 ஆம் அடுக்கில் இருக்கிறது என்பது பல ஆன்மீக அன்பர்களுக்கு தெரிந்த செய்தி!!!பல இமயமலைத்துறவிகள் தினமும் கணபதியை நேரில் தரிசித்துவருவது நிஜம்.


கணங்களின்(சிவ கணங்களின்) பதி(கடவுள் அல்லது தலைவன்) கணபதி!!!


சித்தர்களில் ஆதிசித்தர்கள் என்று உண்டு.ஆதிசித்தர்களில் முதன்மையானவர் கணபதி.கணபதிகள் 33 விதமாக இருக்கிறார்.இறுதியாக பூமியில் பிரபலமடைந்தவர்தான் கண்திருஷ்டி கணபதி!!!!!!

ஸ்ரீ மகாலட்சுமி மந்திரங்கள்



1.மகாலட்சுமி மந்திரம்

ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச,
மம மந்திரே திஷ்ட திஷ்ட ஸ்வாஹா

இது பலிச்சக்ரவர்த்தியால் அனுஷ்டிக்கப்பட்டது. இதனை ஆறு லட்சம் * ஜபிக்க சித்தியாகி லக்ஷ்மி கடாக்ஷம் ஏற்படும். பொய் சொல்லாமை சாஸ்திரங்களில் ஒதுக்கியவற்றை நீக்கி, ஒழுக்கத்துடன் இருப்போருக்கு விரைவில் பலனளிக்கும். இதற்கு சாப நிவர்த்தியாகவும், விரைவில் ஸித்தியாகவும் ஊருக்கு வெளியே உள்ள கறும் எறும்பு (பிள்ளையார் எறும்பு) புற்றுக்கு அரிசி, நெய், சர்க்கரை கலந்து 48 தினங்கள் போட்டு வரவும்.
 

2. ஸ்ரீசூக்த மந்திரம் - தன ஆகர்ஷணம் த்யானம்

ராஜ ராஜேஸ்வரீம் லக்ஷ்மீம் வரதாம் மணிவாலிநீம் !
தேவீம் தேவப்ரியாம் கீர்த்திம் வந்தே காம்ய அர்த்த ஸித்தயே !!

குபேரோ ரிஷி : அனுஷ்ட்டுப் சந்த :
மணி மாலிநீ லக்ஷ்மீ தேவதா
ஸ்ரீம் - ப்லும் - க்லீம் பீஜம்
சக்தி : கீலகம்
ஆம் - ஹ்ரீம் - க்ரோம்
ஐம் - ஸ்ரீம் - ஹ்ரீம்
ஆம் - ஹ்ரீம் - க்ரோம்
என்ற பீஜங்களால் நியாஸம் செய்யவும்.

மந்த்ரம்

உபைது மாம் தேவஸக : கீர்த்திஸ்ச
மணிணாஸஹ
ப்ராதுர் பூதோஸ்மி ராஷ்ட்ரேஸ்மின்
கீர்த்திம் ரித்திம் ததாதுமே.

இந்த வேத ரிக்கை 32 லக்ஷம் தடவை ஸ்ரீபீஜத்துடன் ஜபிக்க குபேரன் ப்ரத்யக்ஷமாவான், வில்வம், தாமரை, முத்து, தாழம்பு முதலியவற்றால் யந்திரத்தை லக்ஷ்மீ ஸஹஸ்ரநாம அர்ச்சனை செய்ய வேண்டும். நாயுருவி சமித்தினால் ஹோமமும் அதே அளவு காயத்ரி ஜபமும் செய்ய வேண்டும். இது ஸ்ரீரத்நகோசத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

மந்திரத்தின் பொருள் :

சிவனின் நண்பனான குபேரனும், கீர்த்தி தேவதையும், சிந்தாமணி என்ற உயர்ந்த நவநிதியுடன் சேர்ந்து என்னை வந்து அடையட்டும்.

குறிப்பு :

முத்தினால் அர்ச்சனை செய்வது விசேஷம். நல்ல வாசனையுள்ள மல்லிகை அல்லது ஜாதி புஷ்பத்தையும் பயன்படுத்தலாம்.


3. அஷ்டலட்சுமி மஹா மந்திரம்

முதலில் மஹாலட்சுமியைத் தனது தொடையில் அமர்த்திக் கொண்டுள்ள மஹாவிஷ்ணுவை த்யானம் செய்யவும்.

ஸ்ரீவத்ஸ வக்ஷஸம் விஷ்ணும் சங்க சக்ர சமன்விதம் !
வாமோரு விலஸல் லக்ஷ்ம்யா லிங்கிதம் பீதவாஸஸம் !!
அஸ்ய ஸ்ரீ அஷ்டலக்ஷ்மீ மஹா மந்த்ரஸ்ய
தக்ஷப்ரஜாபதிருஷி : காயத்ரி சந்த:
மஹாலக்ஷ்மீர் தேவதா ஸ்ரீம் பீஜம் ஹ்ரீம்
சக்தி: நம: கீலகம்: மமஸர்வாபீஷ்ட
ஸத்யர்த்தே ஜபே விநியோக:

தியானம்

அருண கமல ஸமீஸ்தா - முன்பு கொடுக்கப்பட்ட த்யானத்தைச் சொல்லவும்.

ஜபம் செய்ய வேண்டிய மூலமந்திரம்

1. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் கமலே கமலாலயே
ப்ரஸீத ப்ரஸீத. ஸ்ரீம் ஹ்ரீம் ஓம்
மஹாலக்ஷ்ம்யை நம:

2. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம்ஜம் மஹாலக்ஷ்மியை
கமல தாரிண்யை ஸிம்மவாஸின்யை ஸ்வாஹா

3. ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஜம் ஸெள: ஜகத்
ப்ரஸுத்யை ஸ்வாஹா

இவற்றில் ஏதாவது ஒன்றை ஜபம் செய்யவும்.

4. சௌபாக்ய லட்சுமி மந்த்ரம்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸெள:
ஜகத் ப்ரஸுத்யை ஸெளபாக்ய
லக்ஷ்ம்யை நம: ஏஹி, ஏஹி
ஸர்வ ஸெளபாக்யம் தேஹிமே ஸ்வாஹா
என்று சொல்லி க்ஷீரான்னத்தால் ஹோமம் செய்ய வேண்டும்.

5. அஷ்டலட்சுமி மாலா மந்த்ரம்

ஓம் நமோ பகவதீ ஸர்வ லோக வசீகர மோஹினீ
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஹ்ராம் அம் ஆம் யம் ரம் லம்
வம் ஸ்ரீம் ஆதிலக்ஷ்மீ, சந்தான லக்ஷ்மீ,
கஜலக்ஷ்மீ, தனலக்ஷ்மீ, தான்யலக்ஷ்மீ,
விஜயலக்ஷ்மீ, வீரலக்ஷ்மீ, ஐஸ்வர்யலக்ஷ்மீ,
அஷ்டலக்ஷ்மீ, ஸெளபாக்யலக்ஷ்மீ மம ஹ்ருதயமே
த்ருடயா ஸ்த்திதாய ஸர்வலோக வசீகரணாய
ஸர்வ ராஜ்யவசீகரணாய, ஸர்வ ஜன
ஸர்வ ஸ்த்ரீ புருஷ ஆகர்ஷணாய, ஸர்வகார்ய
ஸித்திதாய, மஹாயோகேஸ்வரி, மஹா
ஸெளபாக்ய தாயீனீ மமக்ருஹே புத்ரான் வர்த்தய
வர்த்தய மமமுகே லக்ஷ்மீ, வர்த்ய வர்த்ய
ஸர்வாங்க ஸெளந்தர்யம் போஷய போஷய
ஹாரீம் ஹ்ரீம் மம ஸர்வசத்ருன பந்தய
பந்தய மாரய மாரய நாசய நாசய
ஸ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீம் ஐஸ்வர்ய வ்ருத்திம் குரு
குரு க்லீம் க்லீம் ஸர்வ ஸெளபாக்யம் தேஹிதேஹி
ஸ்ராம் ஸ்ரீம் ஸுவர்ண விருத்திம் குருகுரு
ஸ்ரூம் ஸ்ரைம் ஸுதான்ய விருத்திம் குருகுரு
ஸ்ரீம் ஸ்ரீம் கல்யாண விருத்திம் குருகுரு
ஓம் ஜம்க்லீம் ஸ்ரீம் ஸெள: நமோ பகவதிஸ்ரீ
மஹாலக்ஷ்மீ மமக்ருஹே ஸ்திராபவ நிச்சலாபவ
நமோஸ்துதே ஹும் பட் ஸ்வாஹா.

6. கமலவாசினி மந்த்ரம்

நம : கமல வாசின்யை ஸ்வாஹா

இது சகல ஐஸ்வர்யங்களையும் தரும் - 10 லக்ஷம் ஜபம் - த்ரிமதுரம் கலந்த தாமரையால் ஹோமம் செய்யவும்.

அல்லது உத்திர நக்ஷத்திரத்தில் நந்தியாவட்டை, வில்வப்பழம் ஆகியவற்றால் 1000 ஹோமம் செய்யவும்.

7. பொன் - மணி பெருக லக்ஷ்மீ மந்த்ரம்

லக்ஷ்மியை ஆபரணங்களுடன் த்யாநம் செய்யவும்.

ஓம் ஸ்ரீம் வஸுதே வஸுதாரே வஸுகரி
தனகரி தான்யகரி ரத்னகரி ஸ்வாஹா

என்று தினசரி 108 முறை ஜபம் செய்யவும்.

8. சர்வ ஸெளபாக்யம் தரும் மந்த்ரம்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் மஹாலக்ஷ்மி
மஹாலக்ஷ்மி ஏஹ்யேஹி சர்வ சௌபாக்யம்
மேதேஹி ஸ்வாஹா

அசோக மரத் தணலில் ஹோமம் செய்ய த்ரை லோக்ய வச்யம். எருக்குத் தணலில் ஹோமிக்க ராஜ்ய லாபம், கருங்காலித் தணலில் ஹோமம் செய்ய செல்வம் பெருகும். வில்வ சமித் பாயசம், நெய் ஆகியவற்றால் ஹோமம் செய்தால் மஹாலக்ஷ்மி தரிசனம் கிட்டும்.

9. ராஜ்ய அதிகாரம் (பதவி உயர்வு) ஏற்பட

சித்விலாஸ விருத்தி என்ற நூலில் சொல்லியபடி ராஜ்யலக்ஷ்மி தியானம்

சதுரங்க பலாபேதாம் தநதான்ய ஸுகேஸ்வரீம்
அச்வாரூடா மஹம் வந்தே ராஜலக்ஷ்மீம் ஹிரண்மயீம்.

மந்த்ரம் :

அச்வ பூர்வாம் ரதமத்யாம் ஹஸ்திநாத ப்ரபோதினீம்
ச்ரியம் தேவி முபஹ்வயே ஸ்ரீர் மாதேவீர் ஜுஷதாம்

வெண்தாமரை, குங்குமப்பூ கொண்டு ஆயிரம் முறை ஹோமம் நாற்பத்தெட்டு நாள்கள் செய்தால், ராஜாங்கப் பதவி கிட்டும்

சகல விஷகடிகளுக்கு மந்திரம்



ஓம் ரீங் நசிநசி மசிமசி சகலவிசங்களும் இறங்கு இறங்கு
மாறு மாறு படுபடு சுவாகா.
இம்மந்திரத்தை உடல் சுத்தியுடன் தூய்மையான இடத்தில் அமர்ந்து
1008 உரு செபிக்க சித்தியாகும்.



சித்தியான பின்னர் மூன்று புல்குச்சியினால்
சகலகடிகளுக்கும் மந்திரிக்க விஷம் இறங்கும் இதனால்
பூச்சிகடி,வண்டுகடி,பூராங்கடி,பாம்புகடி,நாய்கடி,பூனைகடி,எலிகடி
முதலானவைகளின் விஷம் இறங்கும்.இம்மந்திரத்தினால் மிளகும்
மந்திரித்து கொடுக்கவும்.













                                                                                                       நன்றி
                                                                                              
                                                                                                          P.சின்னராஜ்